(17.01.1963 to 17.01.2022) 60 அகவை தொடங்கும் உடன் பிறந்த மூத்த சகோதரன் திரு. விவேகானந்தன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கவிதை
- படைத்தவர் சு.க.சு.
உடன் பிறப்பே ! உடன் பிறப்பே !
பிறந்த நாள் வாழ்த்துகள் உடன் பிறப்பே !
தொடங்கியது வயது அறுபது !
உன்னுடைய மனதோ முப்பது !
நீ பேச தொடங்கினால் நிறுத்துவது கடினம் !
உன் பாசம் புரிந்தால் உனை பிரிவது கடினம் !
ஆன்மீக உலகத்தில் அசகாய சூரன் நீர் !
ஆனந்தம் அளிக்கின்ற வற்றாத ஊற்று நீர் !
உறவுகள் வேண்டுமென விரும்புகின்ற உள்ளம் உனது !
மரியாதை எதிர்பாரா மலர்போன்ற நெஞ்சம் உனது !
பக்திதனை பழரசமாய் பருகும் பாந்தமும் உனது !
சக்திகளை பாசமுடன் பார்க்கும் பரிவும் உனது !
வாரிசு பெற்றநீர் ! வளமுடன் வாழ்வீர் நீர் !
பாரிசு சென்றுவர வாழ்த்துகிறேன் தமயன் நான் !
பணியாற்றி பணியாற்றி உழைப்பை ஊருக்கு கொடுத்திட்டீர் !
உண்மையாய் இருந்திங்கு பணப்பெட்டி காலியாய் இருக்கின்றீர் !
மாமனார் மதிப்பளித்து மனதார வாழ்த்திய மருமகன் !
மச்சான் பாசத்தோடு நடாத்திய நேசமிகு மைத்துனன் !
உடன்பிறந்த மூவரையும் எப்போதும் எகிறுகின்ற சகோதரனே !
உளமார பேசாமல் உடனடியாய் உருகுகின்ற உடன்பிறப்பே !
அம்சலதா தாரமாய் பெற்றவரே ! சக்திசொல் கேட்பாயாக !
சம்சாரம் சொல்கேட்டு சாதித்தவர் இவ்வுலகில் ஏராளம் !
அவ்வரிசை நின்றிங்கு அளவில்லா மகிழ்வுற்று வாழ்வீராக !
அடியேனின் வாழ்த்தும் அதையே பறைசாற்றி வருதிங்கே !
பாசமிகு பெருந்தகையே ! நேசமிகு பண்பாளனே !
உளமார பழகுபனே ! உள்ளொன்று இல்லாதவனே !
படிப்பில் மேல்நிலை இல்லாமல் வாழ்பவனும் நீயே !
பலருக்கும் படிப்பினை போதித்து வருபவனும் நீயே !
வாழ்த்த வயதில்லை என்றுசொல்லி ஒதுங்கநான் விரும்பவில்லை !
இதயப் பூர்வமாய் வாழ்த்துகிறேன் ! இமயமாய் வாழ்ந்திட வேண்டுமய்யா நீர் !
- சு.க.சு
No comments:
Post a Comment